வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்து சரமாரி வாள்வெட்டு! குடும்பஸ்தர் படுகாயம்

PARIS TAMIL  PARIS TAMIL
வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்து சரமாரி வாள்வெட்டு! குடும்பஸ்தர் படுகாயம்

வவுனியாவில் வாள்களுடன் வந்த குழுவொன்று வீடொன்றுக்குள் அத்துமீறி புகுந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
 
இந்த சம்பவத்தில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த சம்பவம், குருமன்காடு - காளி கோவில் வீதியில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
குழுவொன்று, நேற்றிரவு குருமன்காடு - காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி புகுந்து, வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
 
அத்துடன் குறித்த குழு மோட்டார் சைக்கிள் ஒன்றையும் முற்றாக சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
 
சம்பவத்தில் வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
இந்த நிலையில் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் வவுனியா - தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குழு என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
குடும்பத் தகராறு ஒன்றுக்காக பழி வாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளதாக தெரியவருகிறது.
 
இதேவேளை, அண்மையில் வவுனியா - தேக்கவத்தை பகுதியில் ஆவா குழு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும், இந்த குழுவினருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

மூலக்கதை