ஜாம்நகர் மகாராஜாவாக சஞ்சய் தத்

தினமலர்  தினமலர்
ஜாம்நகர் மகாராஜாவாக சஞ்சய் தத்

ஓமங் குமாரின் பூமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார் நடிகர் சஞ்சய் தத். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ள நிலையில் சஞ்சய் தத், மீண்டும் ஓமங் குமாரின் படத்தில் நடிக்க உள்ளார். ஓமங் குமார், ஜாம்நகரின் மகாராஜாவை வாழ்க்கையை பற்றி சினிமாவாக எடுக்க உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது நிறைய குழந்தை தொழிலாளர்களை ஜாம்நகர் மகாராஜா காப்பாற்றினார். அவரது வாழ்க்கை படத்தில் சஞ்சயை நடிக்க வைக்க பேசி வருகிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மூலக்கதை