காவல்துறை அதிகாரியை தாக்கிய நபர்! - சுட்டுக்கொலை!!
நபர் ஒருவர் கத்தி ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ள வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Loiret இன் Chalette-sur-Loing பகுதியில் நேற்று சனிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துக்குள் இருந்து காவல்துறை அதிகாரியை குறித்த நபர் கத்தி ஒன்றை காட்டி அச்சுறுத்தல் செய்துள்ளார். காவல்துறை அதிகாரி மகிழுந்தை நெருக்கி வந்துள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக கத்தி மூலம் காவல்துறை அதிகாரியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் மகிழுந்தின் மூலம் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். காயமடைந்த காவல்துறை அதிகாரி தாக்குதல்தாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து குறித்த தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட நபர் முன்னதாகவே காவல்துறையினர் நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாத செயலா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.