அகதிகளுக்கிடையே குழு மோதல்! - ஒருவர் பலி!

PARIS TAMIL  PARIS TAMIL
அகதிகளுக்கிடையே குழு மோதல்!  ஒருவர் பலி!

நேற்று வெள்ளிக்கிழமை இரவு அகதிகளுக்கிடையேயான குழு மோதலில் ஒருவர் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார். 
 
Pas-de-Calais இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 9.30 மணியளவில் சூடான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலருக்கிடையே மோசமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 22 வயதுடைய சூடான் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இரவு 10.10 மணியளவில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. காயமடைந்த அகதி முதலில் Béthune மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர், மூன்று சூடான் நாட்டு அகதிகள் உட்பட நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலக்கதை