லாசப்பலில் அகதிகள் அதிரடி வெளியேற்றம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
லாசப்பலில் அகதிகள் அதிரடி வெளியேற்றம்!!

இன்று வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினரின் உதவியோடு, பரிஸ் லாசப்பலில் இருந்து அகதிகள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். 
 
18 ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் வரவேற்பு அகதி முகாமில் இருந்தே இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அதிகாரிகள் இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டனர். இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு அகதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெளியேற்றத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும், காலை 6 மணிக்கு ஆரம்பித்த வெளியேற்றம் 9.30 மணிக்கு முடிவடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை