2019 உலகக்கோப்பையில் இந்தியாதான் மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்கும்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
2019 உலகக்கோப்பையில் இந்தியாதான் மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்கும்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0  என கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது.

இதனிடையே அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டி:  இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. முழுமையான உடற்தகுதி உள்ள வீரர்களால் மட்டுமே 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும்.



2019 உலகக்கோப்பை தொடரில் உலகின் மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இந்திய அணி இருக்க வேண்டும். வீரர்கள் தேர்வில் பீல்டிங்கும், உடற்தகுதியும் முக்கியமானது.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ரசிகர்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும், எப்படிப்பட்ட வீரர்களை உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும்.

என்றார்.

.

மூலக்கதை