மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்! - இருவருக்கு 8 வருட சிறை!!
amphetamine என அழைக்கப்படும் மிக ஆபத்தான போதைப்பொருளை கடத்திய குற்றத்துக்காக இருவரை சுங்கவரித்துறையினர் கைது செய்துள்ளனர். 67 கிலோ எடையுள்ள இந்த களி (paste) கடந்த 2016 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட மொத்த எடையில் 30 வீதம் என அவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்கள்.
ஓகஸ்ட் 9 ஆம் திகதி அதிகாலை இந்த கடத்தல் போதைப்பொருளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியிருந்தனர். எனினும் இது தொடர்பான செய்திகள் தற்போதுதான் வெளியாகியுள்ளன. இதன் போது இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலாமவருக்கு அதிகபட்ச 8 வருட சிறைத்தண்டனையும், இரண்டாமவருக்கு 4 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றின் எரிபொருள் தாங்கி அருகே மறைத்து வைக்கப்பட்டு, ஸ்பெயினில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், மொத்த மதிப்பு 3 மில்லிய யூரோக்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.