ஓய்வை மறுத்தார் கோலி: அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு?

PARIS TAMIL  PARIS TAMIL
ஓய்வை மறுத்தார் கோலி: அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு?

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
 
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் 2 டெஸ்டுகளில் வென்ற இந்திய அணி, நாளை தொடங்கும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. 
 
இதையடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நாளை மறுதினம் அறிவிக்கப்படுகிறது. 
 
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜாவும், அஸ்வினும் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் ஒரு நாள் தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. 
 
அவர்களுக்கு பதிலாக சாஹல், அக்‌ஷர் பட்டேல், ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார்.
 
கேப்டன் விராத் கோலி ஓய்வு தேவை இல்லை என்று கூறி விட்டதால் அவர் ஒரு நாள் தொடரிலும் ஆடுவார் என்று கூறப்படுகிறது. 

மூலக்கதை