ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் 3வது சுற்றில் பெடரர், நடால்

தினகரன்  தினகரன்

மான்ட்ரியல் : கனடாவில் நடக்கும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்றுக்கு ரோஜர் பெடரர், ரபெல் நடால் தகுதி பெற்றனர். 2ம் சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் பீட்டர் போலஸ்கையை வென்றார். ஸ்பெயினின் நடால் 6-1, 6-2 என்ற செட்களில் குரோஷியாவின் போர்னா கோரிக்கை வென்றார். அர்ஜென்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போர்டோ 4-6, 6-7 என்ற செட்களில் கனடாவின் டெனிஸ் ஷிபோவலோவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 6-4, 7-6 என்ற செட்களில் குரோஷியாவின் டோன்னா வேகிக்கையும், ரொமானியாவின் ஹாலேப் 6-3, 6-3 என்ற செட்களில் சுலோவாகியாவின் ரைபரிகோவாவையும், நம்பர்-1 வீராங்கனை செக்குடியரசின் பில்ஸ்கோவா 6-3, 6-3 என்ற செட்களில் ரஷ்யாவின் பவ்லய்சென்கோவாவையும் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினர். செக் குடியரசின் குவித்தோவா 6-7, 6-3, 2-6 என்ற செட்களில் அமெரிக்காவின் ஸ்டீபென்சிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பெங்க் (சீனா) ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

மூலக்கதை