8 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார் மெத்தியூஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
8 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார் மெத்தியூஸ்!

இந்திய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 28 மாதங்களின் பின்னர் 100 ஓட்டங்களைப் பெற்றார்.
 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் இடம்பெற்று வருகின்றது.
 
இப் போட்டியின் 3 ஆவது நாளான இன்று இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 220 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.
 
இப் போட்டியில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டியில் தனது 8 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அவர் 104 ஓட்டங்களைப்பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
 
இதேவேளை, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிவரும் அணித் தலைவர் சந்திமல் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
 
இதேவேளை, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 536 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

மூலக்கதை