திலீப் மீது குற்றபத்திரிகை தாக்கல் : துபாய் செல்ல அனுமதி

தினமலர்  தினமலர்
திலீப் மீது குற்றபத்திரிகை தாக்கல் : துபாய் செல்ல அனுமதி

நடிகை விவகாரத்தில் சிக்கி, சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார் திலீப். ஜாமீன் வழங்கப்பட்டதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றுதான் திலீப் வெளிநாடு செல்லக்கூடாது என்பது.

இந்நிலையில், கொச்சியில் 'தே புட்டு' என்கிற ஹோட்டலை நடத்தி வருகிறார் உணவு பிரியரான திலீப். துபாயிலும் அதன் கிளையை திறக்க ஏற்பாடுகளை செய்து வந்தார். அதனால் துபாய் சென்றுவர அனுமதித்து தனது பாஸ்போர்ட்டை தர வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் திலீப்.

அவரது கோரிக்கையை விசாரித்த நீதிமன்றம், திலீப் துபாய் சென்று வர ஆறு நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் இரண்டு நாட்கள் துபாய் போய் வருவதற்கான பயணத்திற்கும் நான்கு நாட்கள் துபாயில் தங்குவதற்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை கடத்தல் வழக்கில் 1450 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று(நவ., 22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் 8-வது நபராக திலீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை