அசோக்குமார் தற்கொலை சம்பவம்: நடிகர் சங்கம் துணைநிற்கும்

தினமலர்  தினமலர்
அசோக்குமார் தற்கொலை சம்பவம்: நடிகர் சங்கம் துணைநிற்கும்

சென்னை: சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை சம்பவத்திற்கு சினமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் துணை நிற்கும் என தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் தெரிவித்திருப்பதாவது: அசோக்குமார் தற்கொலை சம்பவம்திரைத்துறையை சுயஆய்வு செய்துகொள்வதற்கான அபாய எச்சரிக்கையாகும். கலைஞர்கள், தொழில்நுட்பவல்லுநர்கள், முதலீட்டாளர்கள் என ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். தவறு இழைத்தோருக்கு சட்டம் தண்டனை தரட்டும். தண்டனை இனி அதீத வட்டி வாங்குவோருக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் எனநடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

நடிகர்கள் விஷால் ,கருணாஸ் அஞ்சலி

மதுரை: தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு நடிகர்கள் விஷால் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. கோமதி நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மூலக்கதை