இலங்கையர்களுக்கு நாசா விடுத்துள்ள அறிவித்தல்!
சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாசா விண்வெளி ஆய்வு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது.
இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.