மூன்று மாணவிகளுக்கு அதிபர் செய்த கொடூரம்! சம்மாந்துறையில் சம்பவம்

PARIS TAMIL  PARIS TAMIL
மூன்று மாணவிகளுக்கு அதிபர் செய்த கொடூரம்! சம்மாந்துறையில் சம்பவம்

அம்பாறை - சம்மாந்துறை கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவிகள் மூன்று பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த அதிபர் கடந்த மாதங்களின் மூன்று சந்தர்ப்பத்தில் இவ்வாறு குறித்த மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பின்னர் , இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த அதிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
10 வயதுடைய மாணவிகள் மூன்று பேரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மூலக்கதை