மகிழுந்து மோதி ஏழு வயது சிறுவன் பலி!- மது போதையில் சாரதி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
மகிழுந்து மோதி ஏழு வயது சிறுவன் பலி! மது போதையில் சாரதி கைது!!

மகிழுந்து விபத்தொன்றில் ஏழு வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அவனது தாயாரும் மிகமோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சாரதி மதுபோதையில் மகிழுந்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Seine-et-Marne இல் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய மகிழுந்து சாரதி முற்றாக மது அருந்தியிருந்தார் என இராணுவ காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. Maserati நிறுவனத்தின் மகிழுந்தை D619 வீதியில், Mormant நோக்கி செலுத்திக்கொண்டிருந்தார். மது போதையில் கட்டுப்பாடு இல்லாமல் சென்ற மகிழுந்து வீதில் நடந்து சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் மகனை மோதி எறிந்தது. இதில் 7 வயதுடைய சிறுவன் மரம் ஒன்றுக்கும் மகிழுந்துக்குமிடையே சிக்குண்டு சிதைந்து உயிரிழந்துள்ளான். சிறுவனின் தாயார் துரித கதியில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 
 
சாரதி கைது செய்யப்பட்டு, காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார். சாரதி நிறை போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை