Clichy - இஸ்லாமியர்கள் வீதிகளில் தொழுவதற்கு தடை விதிக்கப்படும்! - உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!
கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி வரும் Clichy நகர இஸ்லாமியர்களின் வீதி தொழுகை தொடர்பாக உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 13 தாக்குதலுக்கு பின்னர் Clichy-la-Garenne பகுதியில் உள்ள பள்ளிவாசல் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை திறக்க அனுமதி கோரி, வீதிகளில் தொழுகையை நடத்தி வருகின்றனர். அமைதியாக இது இடம்பெற்ற போதும், இது மிகப்பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது அவர்கள் Clichy நகர மண்டபத்தை முற்றுகையிட்டு வரும் வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் Gérard Collomb தெரிவிக்கும் போது, 'வீதி தொழுகை தடுக்கப்படும். இஸ்லாமியர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் தொழ வேண்டும். வரும் வாரங்களில் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்போம்!' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இவர்கள் வீதிகளில் தொழுகை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.