நுவரெலியா போன்று மாறிய வவுனியா!

PARIS TAMIL  PARIS TAMIL
நுவரெலியா போன்று மாறிய வவுனியா!

வவுனியா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசத்திலும் ஏ9 வீதியில் பனி மூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளமையினால் நுவரெலியாக போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று காலை இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
வவுனியா, மாங்குளம், புலியங்குளம் மற்றும் இரட்டைபெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் இந்த பனி மூட்டம் நிறைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடந்த சில நாட்களாக காணப்பட்ட வறட்சியான காலநிலையை தொடர்ந்து பனி மூட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த பனிமூட்டம் காரணமாக அவதானமாக வாகனம் ஓட்டுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 
 
 

மூலக்கதை