வவுனியாவில் முல்லைத்தீவு பெண் ஒருவர் கைது!
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுளள்ார்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் வைத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 கிலோ 32கிராம் கேரள கஞ்சாவினைப் பயணப்பொதியில் வைத்து கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின், வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.