த்ரிஷாவை சமாதானப்படுத்திய விக்ரம்
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் - சாமி-2. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்துக்கு 'சாமி ஸ்கொயர்' என்று வினோதமான பெயரை சூட்டியுள்ளனர்.
புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி. எனவே அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சாமி-2 படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா தெரிவித்திருந்தார்.
மகளின் திருமண வேலையில் பிசியாக இருந்த விக்ரம், அண்மையில் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று அவரை சமாதானப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் சமாதானப்படுத்தியதை அடுத்து இப்போது அந்த கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், த்ரிஷா மீண்டும் சாமி2 படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை டில்லியைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவிலுள்ள கண்ணூரில் நடைபெற்று வருகிறது.