விஜய் அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணையப்போகிறதா?

PARIS TAMIL  PARIS TAMIL
விஜய் அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணையப்போகிறதா?

 விஜய் – அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறது என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்காக இருக்கிறது. இந்தக் கூட்டணி மறுபடியும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.

 
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் என பெரிய டீமுடன் தான் களம் இறங்கினார்.
 
 
அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
சமந்தா, எமி ஜாக்சன் ஹீரோயின்களாக நடித்த ‘தெறி’ படமும் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
 
தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிப்பு, 100 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சத்யன் என மிகப்பெரிய டீமாக அமைந்தது ‘மெர்சல்’ படம்.
 
 
தீபாவளி தினத்தன்று வெளியான ‘மெர்சல்’, பக்கா மாஸாக இருந்தது. சமூகப் பிரச்னைகளுடன், அரசியலும் பேசி கலக்கியிருந்தார் விஜய். மூன்று வேடங்களில் விஜய் நடித்த இந்தப் படத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
அட்லீ இதுவரை இயக்கிய மூன்று படங்களுமே வேறு வேறு படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும், சுவாரசியமான வகையில் படமாக்கியுள்ளார்.
 
தொடர்ந்து இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த நிலையில், அடுத்த படத்துக்கும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் அட்லீ. ‘அதுக்கென்ன… தந்துட்டா போச்சு’ என்று சொல்லியிருக்கிறாராம் விஜய்.
 
 
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கலாம் என்கிறார்கள். அதன்பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கக் கூடும்.
 
அஜித்தும் இப்படித்தான். இயக்குநர் சிவாவை ரொம்பவே பிடித்துப் போனதால் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு கொடுத்தார்.
 
நான்காவது முறையாகவும் அஜித் – சிவா கூட்டணி இணைகிறது என்கிறார்கள். அதேபோல், விஜய்யும் மூன்றாவது முறையாக அட்லீக்கு வாய்ப்பு தரலாம் என்கிறார்கள்.

மூலக்கதை