துனிசியா - முத்தமிட்ட பிரெஞ்சு நபருக்கும் அவரது காதலிக்கும் சிறை!!
நேற்று புதன்கிழமை, துனிசிய நாட்டில் நாற்பது மற்றும் முப்பது வயதுகளையுடைய இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, குறித்த இருவரும் காதலர்கள் எனவும், இருவரும் மகிழுந்து ஒன்றுக்குள் முத்தமிட்டுக்கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அறியமுடிகிறது. ஆனால் இந்த குற்றத்தை அவர்கள் மறுத்துள்ளனர். 'அப்போது நாங்கள் முத்தமிடவே இல்லை. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு!' என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தவிர, காவல்துறையினர் தரப்பில், 'பொது இடத்தில் நிர்வாணமாக இருந்துள்ளனர். அநாகரீகமாக செயற்பட்டதால் கைது செய்துள்ளோம்!' என தெரிவித்துள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் எங்களை அவமதித்துள்ளனர் என அவர்கள் மீள் விசாரணைகளுக்கு கோரியுள்ளனர்.