பெரும் மழை வெள்ள எச்சரிக்கை!!
பிரான்சின் வானிலை மையம், இன்று மாலையில் இருந்து நாளை வியாழக்கிழமை முழுவதிற்கும், Languedoc, Aude, Hérault ஆகியவற்றின் மாவட்டங்களிற்குக் கடும் புயல் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நீரோட்டம் உள்ள பகுதிகளிற்குச் செல்லவேண்டாம் எனவும், இதனால் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது எனவும் எச்சரித்து, செம்மஞ்சள் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
ஏற்கனவே 90 மில்லி மீற்றர் அனவிற்கு மழை பெய்துள்ள நிலையில், 250 மில்லிமீற்றர் அளவு வெள்ளம் இன்று இரவிற்குள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.