துறைமுகத்தை முடக்கிய திமிங்கிலம்!! பெரும் பரபரப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
துறைமுகத்தை முடக்கிய திமிங்கிலம்!! பெரும் பரபரப்பு!!

15 மீற்றர் நீளமான திமிங்கிலம் ஒன்று, மார்செய்யின் ; Vieux-Port  துறைமுகப் பகுதியில் வந்து, அனைத்துக் கடற் போக்குவரத்துக்களையும் முடக்கி உள்ளது. துறைமுகப் பகுதிக்கு வந்த இந்தத் திமிங்கிலம், அதற்கள் சிக்கிக் கொண்டு, போக இடம் இல்லாமல் தவித்துள்ளது.
 
 
காவற்துறையினர், மற்றும், மார்செய்யின் கடல்வழித் தீயணைப்புப் படையினர், சில மணி நேரங்களாகப் போராடி, மீண்டும் திமிங்கிலத்தை ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல உதவி உள்ளனர்.
 
 
 
மார்செய் பகுதியில் முதன் முறையாகத் திமிங்கிலம் வந்தமை, காவற்துறையினர்க்கும், மக்களிற்கும், அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வழங்கி உள்ளது. சிறிய வகை மீன்களின் மீன்பிடி முறையே இந்தக் கடற்பகுதி மற்றும் துறைமுகப் பகுதிகளில் நடப்பது வழமை என, மார்செய்யின் காவற்துறையினர் தங்களது டுவிட்ரில் பதிவு செய்துள்ளனர்.
 

மூலக்கதை