துன்புறுத்தல் தொடர்பாக பெண்கள் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது! - பிரிஜித் மக்ரோன் தெரிவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
துன்புறுத்தல் தொடர்பாக பெண்கள் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது!  பிரிஜித் மக்ரோன் தெரிவிப்பு!!

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெண்கள் வெளியில் பேச ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். 
 
நேற்று, பரிசில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்திருந்த பிரிஜித் மக்ரோனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, பிரபல அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்  Harvey Weinstein மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறிப்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பிரிஜித் மக்ரோன் தெரிவிக்கும் போது, 'இது தொடர்பாக பெண்கள் பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு தீமைக்கு எதிரான நன்மை!' என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சமூக வலைத்தளமான டுவிட்டரில்  #balancetonporc எனும் குறியீட்டு வார்த்தையில், பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் குற்றங்களையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

மூலக்கதை