தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்: யுவராஜ் சிங் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்: யுவராஜ் சிங் வலியுறுத்தல்

மொகாலி: தீபாவளி பண்டிகை வரும் 18ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். பட்டாசுகள் வேண்டாம் என சொல்வோம், மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலை தளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசுகளை வெடித்ததால், காற்று மிகவும் மாசடைந்தது.

என்னால் வீட்டை விட்டே வெளியே வர முடியவில்லை. நாம் சுவாசிக்கின்ற காற்று பேரழிவை ஏற்படுத்தி விடும்.

நாம்தான் பொறுப்பு எடுத்து கொண்டு பட்டாசு வெடிக்காமல் இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது, அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை நாம் பரப்ப வேண்டும்’’ என கூறியுள்ளார்.


.

மூலக்கதை