கொலம்பியாவுடன் இன்று மோதல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்: இந்திய யு-17 அணி வீரர்களுக்கு பூட்டியா ‘அட்வைஸ்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொலம்பியாவுடன் இன்று மோதல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்: இந்திய யு17 அணி வீரர்களுக்கு பூட்டியா ‘அட்வைஸ்’

புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்று வரும் பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி முதல் முறையாக விளையாடி வருகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில், பலம் வாய்ந்த கொலம்பியா அணியை இந்தியா எதிர்கொள்கிறது. கொலம்பியா அணியும் தனது முதல் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கானாவிடம் தோல்வியையே சந்தித்துள்ளது.



இதனால் இந்திய வீரர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இது குறித்து இந்திய சீனியர் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியா கூறுகையில், ‘’கொலம்பியாவை விட பந்தை இந்திய வீரர்கள் அதிக நேரம் வைத்திருப்பதை காண விரும்புகிறேன்.

இதன் மூலம் இந்திய வீரர்கள் போட்டியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்திய வீரர்கள் இன்னும் அதிக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்’’ என்றார்.


.

மூலக்கதை