தோள்பட்டையில் காயம் ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தோள்பட்டையில் காயம் ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பினார்

ராஞ்சி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 4-1 என இழந்தது. இதன்பின் இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி கவுஹாத்தியில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னதாக தோள்பட்டை காயம் காரணமாக, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதல் போட்டியில் விளையாடவில்லை. காயத்தின் தீவிரம் அதிகமானதால், அவர் டி20 தொடரில் இருந்தே விலகியதுடன், ஆஸ்திரேலியா சென்று விட்டார்.



விமானத்தில் பயணிப்பது போன்ற படத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள அவர், ‘’ஒரு நாள் தொடரில், எங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியின்போது, துரதிருஷ்டவசமாக எனது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதால், ஓய்வு எடுக்கவும், காயத்தில் இருந்து மீண்டு வரவும், நான் நாடு திரும்ப வேண்டியதாகி விட்டது.

அடுத்த 2 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் எழுச்சியுடன் விளையாடுவதை காண விரும்புகிறேன்’’ என கூறியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை