இத்தாலியில் சிறிலங்கா இளைஞர்களின் அட்டகாசம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இத்தாலியில் சிறிலங்கா இளைஞர்களின் அட்டகாசம்!

 சிறிலங்காவை சேர்ந்த இரு இளைஞர்கள் இத்தாலியில் மோசமாக மோதிக்கொண்ட சம்பவம் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
இதாலியின் வெரோனா நகரின் பிரதான தொடருந்து நிலையத்துக்கு அருகிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளியை இத்தாலி நாட்டவர்கள் மிகுந்த அதிருப்தியுடன் வெளியிட்டுள்ளனர்.
 
நேற்று முந்தினம் இடம்பெற்ற இந்த மோதலின்போது குறித்த இளைஞர்களில் ஒருவரின் கையில் கைத்துப்பாக்கியும் இருந்துள்ளமை காணொளியில் பதிவாகியுள்ளது. அவர் அந்தக் கைத்துப்பாக்கியால் தனது எதிரியான மற்ற இளைஞரை சுடுவது போல் மிரட்டுகின்றார்.
 
இவர்கள் இருவரதும் மோதல் நிலையால் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வரவழைக்கப்பட்டனர். பின்னர் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் பொலிஸாரின் துப்பாக்கி முனையில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
 
இது குறித்து காணொளியுடன் பதிவு வெளியிட்ட இத்தாலி நாட்டவர், “இவர்கள் இருவரும் ஒரு மோசமான பிள்ளைகள். இங்கே மரியாதையுடன் வாழ்வதற்கு வந்தார்களா அல்லது எங்களையும் அழிப்பதற்கு வந்தார்களா?” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
குறித்த இளைஞர்கள் இருவரும் என்ன காரணத்திற்காக மோதிக்கொண்டார்கள் என்பது வெளியிடப்படவில்லை.

மூலக்கதை