யாழில் 13 வயது மாணவிக்கு சமுர்த்தி அதிகாரி செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் 13 வயது மாணவிக்கு சமுர்த்தி அதிகாரி செய்த காரியம்!

 பாடசாலை மாணவி ஒருவர் விளையாட்டு பயிற்சியில் ஈடுப்பட்ட போது அவரிடம் பாலியல் நடவடிக்கை மேற்கொண்டதாக சந்தேகத்தில் பேரில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
யாழ், மண்டதீவு பிரதேசத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சந்தேக நபரான சமுர்த்தி அதிகாரி நேற்று யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட சமுர்த்தி அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
குறித்த மாணவிக்கு கடந்த 12ஆம் திகதி மண்டதீவு ஏ - கிராம சேவர் பிரிவின் சமுர்த்தி அதிகாரியினால் விளையாட்டு பயிற்சி நடவடிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
மாணவி அன்றைய தினம் வருகைத்தந்தன் பின்னர் மண்டதீவு விளையாட்டு மைதான அறைக்குள் இவ்வாறு முத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
குறித்த சம்பவத்தின் பின்னர் அந்த மாணவியினால் இது தொடர்பில் பெற்றோரிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மண்டதீவு பிரதேச செயலாளரிடம் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பிக்குமாறும், குறித்த சம்பவம் தொடர்பில் அலுவலக மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதன் பின்னர் விசாரணை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்றைய தினம் குறித்த சமுர்த்தி அதிகாரியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலக்கதை