பிறந்த நாள் பரிசை திருப்பி கேட்டு பொலிஸில் முறைப்பாடு செய்த நபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிறந்த நாள் பரிசை திருப்பி கேட்டு பொலிஸில் முறைப்பாடு செய்த நபர்!

சமாதான நீதவான் ஒருவர் அயல் வீட்டில் உள்ள குழந்தையின் பிறந்த நாளிற்கு கொடுத்த பரிசை திருப்பி கேட்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள விசித்திர சம்பவம் ஒன்று பண்டாரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
குறித்த நபரும் அயல் வீட்டில் உள்ள ஆசிரியர் குடும்பத்தினரும் நல்ல நட்புறவுடன் இருந்து வந்துள்ளனர்.
 
ஆசிரியர் தம்பதியினருக்கு ஒன்றரை வருடத்திற்கு முதல் பிறந்த குழந்தைக்கு சமாதான நீதவான் தங்கத்தினாலான தாயம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
 
இந்த நிலையில் குறித்த இருவருக்கும் இடையில் காணி சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு சமாதான நீதவான் பரிசாக வழங்கிய தாயத்தை திருப்பி தருமாறு ஆசிரியருக்கு குறுந்தகவல் அனுப்பியதோடு பொலிஸார் மூலமும் முறைப்பாடு செய்துள்ளார்.
 
இதனையடுத்து ஆசிரியர் தனது பிள்ளையிடம் இருந்து தாயத்தை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
எனினும் 18000 ரூபா பெறுமதியுடைய தாயத்தை தான் விற்கப் போவதாகவும் அதனால் பற்றுச்சீட்டை பெற்றுத் தரும்படியும் கோரியுள்ளார்.
 
பரிசு என்பதினால் தாம் அதை பாதுகாப்பாக வைக்கவில்லை என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

மூலக்கதை