யாழில் குற்றுயிராய் கிடந்த நபர் மரணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் குற்றுயிராய் கிடந்த நபர் மரணம்!

யாழ் நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவிலின் தேர் முட்டிக்கு அருகில் இன்று அதிகாலையில் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராய் கிடந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
அரியாலை நாவலர் வீதியை சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று அதிகாலை யாழ் நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் குறித்த நபர் குற்றுயிராய் கிடந்துள்ளார்.
 
அப்பகுதியால் சென்ற நபர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
குறித்த நபரை அவரது வீட்டிலே இருந்து நேற்றைய தினம் இரவு இனந்தெரியாத நபர்கள் அடித்து இழுத்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இது  தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை