பெறுபேறுகளுக்கு காத்திருப்பதற்கு பொறுமை இன்றி உயிரை விட்ட இளைஞர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பெறுபேறுகளுக்கு காத்திருப்பதற்கு பொறுமை இன்றி உயிரை விட்ட இளைஞர்!

வவுனியா- கூமாங்குளத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
வவுனியா கூமாங்குளத்தில் வசித்துவரும் 20 வயதுடைய பாஸ்கரன் விதூசன்  என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
குறித்த இளைஞர் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவில் பரீட்சை எழுதியிருக்கிறார். எனினும் தகுதி காணாமையால் இந்த ஆண்டும் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
 
அத்தோடு இந்த முறை எவ்வாறு பெறுபேறு வருகிறதோ என பெற்றோரிடம் அடிக்கடி கவலையுணர்வுடன் கதைத்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் குறித்த இளைஞர் தாயார் கடைக்கு சென்று வீடு திரும்பிய போது  வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
 
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்தோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை