சாம்பியன்ஸ் டிராபி இந்தியா விளையாடும் போட்டிகளின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் டிராபி இந்தியா விளையாடும் போட்டிகளின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-18 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. ஐசிசி தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன.

லீக், அரையிறுதி, இறுதி என ஒட்டுமொத்தமாக 15 போட்டிகள் நடைபெறவுள்ளது.
‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியா லீக் சுற்றில், ஜுன் 4ம் தேதி பாகிஸ்தானையும், ஜுன் 8ம் தேதி இலங்கையையும், ஜுன் 11ம் தேதி தென் ஆப்ரிக்காவையும் எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள், இங்கிலாந்து - வங்கதேசம், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, 2 அரையிறுதி, 1 இறுதி போட்டி என மொத்தம் 8 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் தற்போதே விற்று தீர்ந்து விட்டன.

எஞ்சிய 7 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒப்பிடுகையில் தற்போது டிக்கெட் விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியா-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

.

மூலக்கதை