மோசமாக விளையாடிய பெங்களூரு : ரசிகர்களிடம் கோஹ்லி மன்னிப்பு கேட்டார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோசமாக விளையாடிய பெங்களூரு : ரசிகர்களிடம் கோஹ்லி மன்னிப்பு கேட்டார்

பெங்களூரு: ஐபிஎல் 10வது சீசனில் கோப்பை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மோசமாக விளையாடிய பெங்களூரு, 13 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்தது.

2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

கடந்த சீசனில் பைனல் வரை முன்னேறிய பெங்களூரு நடப்பு சீசனில் முதல் அணியாக ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்தது. இதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.



இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் உருக்கமாக கூறியிருப்பதாவது: நடப்பு சீசனில் ரசிகர்கள் அளித்த நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் தரத்திற்கு ஏற்ப விளையாடாததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெங்களூரு அணி தனது கடைசி லீக் போட்டியில் வரும் 14ம் தேதி இரவு 8 மணிக்கு டெல்லி டேர்டெவில்சுடன் மோதுகிறது.  

.

மூலக்கதை