பெங்களுரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

PARIS TAMIL  PARIS TAMIL
பெங்களுரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

 ஐ.பி.எல் போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது.

 
ஐ.பி.எல்: பெங்களுரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி
பெங்களூர்:
 
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 43-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. 
 
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஏ.ஆர். படேல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்களை விளாசினார். 
 
பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ரன்களை குவித்தது. பின் 139 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களுரு சார்பில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 
 
19 ஓவர்கள் முடிவில் 119 ரன்களுக்கு பெங்களூரு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி சார்பில் ஏ.ஆர். படேல் மூன்று விக்கெட்களையும், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களையும், எம்.எம். ஷர்மா மற்றும் ஜி.ஜெ. மாக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

மூலக்கதை