ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

தினகரன்  தினகரன்

மொஹாலி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 17.1 ஓவர்களில் 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிபட்சமாக ஆண்டர்சன் 18 ரன்கள் எடுத்தார். 6 பேர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். அபாரமாக பந்து வீசிய சந்தீப்சர்மா 4, அக்‌ஷர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணி 7.5 ஓவர்களில் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய குப்டில் 50 ரன்கள் எடுத்தார்.

மூலக்கதை