சந்தி சிரித்த வாணி ராணி நடிகையின் கள்ளக்காதல் சண்டை: வைரலான கண்ட்ராவி வீடியோ இதோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சந்தி சிரித்த வாணி ராணி நடிகையின் கள்ளக்காதல் சண்டை: வைரலான கண்ட்ராவி வீடியோ இதோ

சென்னை: வாணி ராணி தொடரில் குடும்பத்தை பிரித்த வில்லியான சபீதா ராய் அந்த தொடரை தயாரிக்கும் நிறுவன மேலாளருடன் நடுத்தெருவில் சண்டை போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இல்லத்தரசிகள் டிவி சீரியல்களுடன் ஒன்றிப் போய் வாழ்கிறார்கள். இதை பார்த்து கணவன்மார்கள் காண்டாகிறார்கள். இப்படி இல்லத்தரசிகளின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ள சீரியல்களில் ஒன்று வாணி ராணி.

பிரபல நடிகை நடிக்கும் இந்த சீரியல் மிக மிக பிரபலம்.

வாணி ராணி சீரியலில் ஒரு குடும்பத்தை பிரித்த புண்ணியவதியாக வந்தவர் சபீதா ராய். அவருக்கும் அந்த தொடரை தயாரிக்கும் நிறுவன மேலாளரான சுகுமாறனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுகுமாறனின் மனைவி குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்ற நேரத்தில் சபீதா அங்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

சுகுமாறனின் வீட்டிற்கு முன்பு அவருக்கும், சபீதா ராய்க்கும் இடையே நள்ளிரவில் பணம் காரணமாக அடிதடி சண்டை நடந்தது. சுகுமாறன், சபீதா மாறி மாறி தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சபீதாவின் முடியை பிடித்து இழுத்து தலையில் அடித்த சுகுமாறன் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூற சபீதா பண்றா கொலை என்று அலறுகிறார் அந்த வீடியோவில்.

மூலக்கதை