ரீ எண்ட்ரியால் நடிகை குடும்பத்தில் புகைச்சல் ஆரம்பம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரீ எண்ட்ரியால் நடிகை குடும்பத்தில் புகைச்சல் ஆரம்பம்!

ஆடிய காலையும் பாடிய வாயையும் சும்மா வைத்திருக்க முடியாது என்று சொல்வதன் அர்த்தம் யாருக்குப் புரிகிறதோ இல்லையோ நடிகைகளைத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு நன்றாகப் புரியும்.

சுதந்திரப் பறவையாக இருந்தவர்களுக்கு தாம்பத்ய சிறை ஒரு கட்டத்தில் போரடித்தால் மீண்டும் சிறகடிக்கவே ஆசைப்படுவார்கள். அப்போது வீட்டில் சிக்கல்கள் அதிகரிக்கும்.

ரீ எண்ட்ரியான நடிகை வீட்டிலும் அப்படித்தான். புகுந்த வீட்டிலேயே மூன்று நடிகர்கள் இருப்பதால்தான் துணிந்து உள்ளே நுழைந்தார். சில ஆண்டுகள் கழித்து நடிக்க வந்தவர் இப்போது சுதந்திரப் பறவையாக மாறத் துடிக்கிறாராம். டாப் ஹீரோ படத்தில் நடிக்கவிருந்தவரை குடும்பத்தினர்தான் தடுத்தார்களாம்.

சமீபத்தில் கிடைத்த மேடையில் தன் கணவர் உட்பட எல்லா ஹீரோக்களையுமே கிண்டல் செய்து பேசியதற்கு நடிகையின் மனநிலையும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ஓப்பன் டாக்கின் விளைவு வீட்டில் எதிரொலிக்க தொடங்கியுள்ளதாம்!

மூலக்கதை