21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி

தினமலர்  தினமலர்
21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் அதிக உயர்வுடன் காணப்படுகிறது. அதிலும் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.64.07-ஆக வர்த்தகமானது. பங்குச்சந்தைகளில் காணப்படும் அதிக ஏற்றம், அதிகளவில் அந்நிய முதலீடுகள் உள்ளே வருவதாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ.64.26-ஆக இருந்தது.

மூலக்கதை