கபாலி ரஜினியை சந்திக்க வரும் மலேசிய பிரதமர்!
இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் மலேசியா பிரதமர் நஜிப் ரஜாக், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
2 நாள் பயணமாக சென்னை வரும் மலேசியா பிரதமர் நஜிப் ரஜாக், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், அதன் பின் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவில் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர்.
அதோடு மலேசிய தமிழர்கள் குறித்து அண்மையில் வெளியான கபாலி திரைப்படம், மலேசிய தமிழர்களை கவர்ந்தது. இதனால் நடிகர் ரஜினி மேல் ஒரு மரியாதை உண்டு.
இதை தன் பக்கம் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டும், விரைவில் வர உள்ள பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, மலேசியாவில் உள்ள தமிழர்களை கவரும் பொருட்டு, ரஜினியை சந்திக்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.அதன் பின், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நஜிப் ரஜாக்கிற்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட உள்ளது.
மேலும் சென்னை பயணத்தை முடித்து, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களுக்கு ரஜாக் செல்ல உள்ளார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த சந்திப்பு நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.