யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் கிடைத்த நன்மை!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் கிடைத்த நன்மை!

 யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை காரணமாக மேலுமொரு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. 

 
யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து எட்டாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே இந்த ஆசனக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
வருடாந்தம் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை