நவரத்தினங்கள் – ஆபரணங்கள் துறைக்கு ஜி.எஸ்.டி., சாப்ட்வேர் தயார்
மும்பை : நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நிதின் கந்தல்வால் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1ல் அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பை, நவரத்தினங்கள் மற்றும் நகை வியாபாரிகள் பின்பற்றுவதற்காக, தனி சாப்ட்வேர் உருவாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள நகை விற்பனையாளர்களுக்கு, வலைதளம் மூலம், சாப்ட்வேர் பயன்பாடு குறித்து பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம், அனைத்து நகை வியாபாரிகளும், சுலபமாக, ஜி.எஸ்.டி., வரியை பின்பற்ற முடியும்.
இந்த வரி விதிப்பை, எங்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது. ஆனால், சில அம்சங்கள் குறித்து, அரசிடம் பேச்சு நடத்தி வருகிறோம். குறிப்பாக, நகை விற்பனைக்கு, 1.25 வரி விதிக்க கோருகிறோம். அதற்கு மேற்பட்ட வரி விதிக்கப்பட்டால், அது, தொழிலை பாதிக்கும். அதுபோல, ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகளை பயன்படுத்தி நகை வாங்குவோருக்கு, பரிவர்த்தனை கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.