இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! அனலைதீவைச் சேர்ந்தவர்கள் கைது

PARIS TAMIL  PARIS TAMIL
இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! அனலைதீவைச் சேர்ந்தவர்கள் கைது

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நல்லூரில் நேற்று மாலை  இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
 
நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உந்துருளி ஒன்றில் தப்பிச் சென்றிருந்தார்.
 
இதையடுத்து நடத்தப்பட்ட  விசாரணைகளின் அடிப்படையில், அனலைதீவைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை