யாழில் இராணுவத்தினர் மீது மர்ம நபர்கள் வாள் வெட்டு தாக்குதல்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் இராணுவத்தினர் மீது மர்ம நபர்கள் வாள் வெட்டு தாக்குதல்!

கொடிகாமம் - வரணி பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இனந்தெரியாத நபர்களால் இந்த வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
 
வாள்வெட்டிற்கு உள்ளான இராணுவத்தினர் கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், இந்த சம்பவம் வரணி பகுதியிலுள்ள முல்லி என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
 
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

மூலக்கதை