சோம்ப்ஸ்-எலிசே தாக்குதல்தாரியின் உறவினர்கள் விடுவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ்எலிசே தாக்குதல்தாரியின் உறவினர்கள் விடுவிப்பு!!

கடந்த திங்கட்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் ஜோந்தாமினர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்த பயங்கரவாதி Adam Djaziri இன் உறவினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் 
 
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இரவு Essonne மாவட்டத்தின் Plessis-Pate பகுதியில் வசித்த பயங்கரவாதி Adam Djaziri இன் தந்தை மற்றும் முன்னாள் மனைவி, சகோதரன், சகோதரனின் மனைவி என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஜோந்தாமினர்களின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு பின், நேற்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பயங்கரவாதி உட்பட குடும்ப உறுப்பினர்கள் இப்பகுதியில் கடந்த 28 வருடங்களாக வசித்து வருவதும், அயலவர்களுடன் மிக கனிவாக நடந்துகொள்ளும் குடும்பத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்லப்பட்ட Adam Djaziri, காவல்துறையினரின் S வலையமைப்புக்குள் கண்காணிக்கப்பட்டு வந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை