சீனாவில் ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் இந்திய அணி அறிவிப்பு
பெங்களூரு: சீனாவில் நடைபெற உள்ள ஸ்நூக்கர் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகத்தை சேர்ந்த வீரர்கள் நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர். பெங்களூருவில் நடந்த தகுதிச் சுற்றில் தேசிய அளவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மைலாப்பூர் வித்யாமந்திர் மாணவி அனுபமா ராமச்சந்திரன், குன்னூர் செயின்ட் ஜோசப் மாணவி மரியம் ஆக்னஸ், கோலார் தங்கவயல், பங்காரு பேட்டையை சேர்ந்த கீர்த்தனா பாண்டியன் ஆகிய மூன்று பேர் மகளிட் யு-18 பிரிவில் தேர்வாகியுள்ளனர். யு-18 ஆண்கள் பிரிவில் ஸ்ரீகிருஷ்ணா தேர்வாகியுள்ளார். இதுதவிர 21 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் உசைன்கான், அசுதோஷ்பதி, ஹிரிதிக் ஜெயின் மற்றும் வர்ஷா சஞ்சீவ், கீரத்பண்டால், லஹரி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். இந்த தொடர் பெய்ஜிங் நகரில் (ஜூலை 7-16) நடைபெற உள்ளது.