வியாழக்கிழமை வரை வாட்டி எடுக்கும் வெயில்! - அவதானம்!!
ஜூன் மாதம் ஆரம்பித்ததில் இருந்து நாடுமுழுவதும் அதிகளவான வெப்பம் நிலவி வரும் இவ்வேளையில்.. நேற்று திங்கட்கிழமை, இன்று செவ்வாய்க்கிழமை அதிகப்படியான வெயில் அளவு பதிவாகியுள்ளது. அதவிர இந்த வெயில் வரும் வியாழன் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை ஆய்வு மையம் தெரிவிக்கும்போது, நாட்டின் தென்கிழக்கு பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் வியாழக்கிழமைக்கு பின்னர் வெயில் வழமைக்குத் திரும்பும் என குறிப்பிட்டுள்ளது. பரிஸ் மற்றும் மத்திய, தென்கிழக்கு மாவட்டங்களில் இந்த அதிகளவான வெப்பம் நிலவும் எனவும், மொத்தமாக 51 மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 31 செல்சியஸ் தொடக்கம் 35 வரை வெயில் பதிவாகும் எனவும், Pays de Loire, Poitou உள்ளிட்ட சில பகுதிகளில் 36 தொடக்கம் 37 வரை வெயில் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணளவாக நாளை புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் 36 செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும், பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர்.