ஐசிசி கனவு அணியில் 3 இந்திய வீரர்கள் தேர்வு

தினகரன்  தினகரன்

லண்டன், ஜூன் 20: மினி உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. பாகிஸ்தானின் சர்பராஸ் அகமது தலைமையிலான அணியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றுள்ளனர்.இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், 5 அணிகளை சேர்ந்த வீரர்கள் மட்டும் கனவு அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்கு பாகிஸ்தான் வீரர்கள், இந்தியா (3), இங்கிலாந்து (3), வங்கதேச அணியில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 12வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி கனவு அணி: ஷிகர் தவான் (இந்தியா), பகார் ஸமான் (பாக்.), தமிம் இக்பால் (வங்கதேசம்), விராத் கோஹ்லி (இந்தியா), ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), சர்பராஸ் அகமது (கேப்டன், பாக்.), அடில் ரஷித் (இங்கிலாந்து), ஜுனைத் கான் (பாக்.), புவனேஷ்வர் குமார் (இந்தியா), ஹசன் அலி (பாக்.), கேன் வில்லியம்சன் (நியூசி. 12வது வீரர்).

மூலக்கதை