இறுதிப்போட்டியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இறுதிப்போட்டியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்!

 இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் சந்திக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
இந்நிலையில், இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக ’ரோலண்ட் லேண்டர்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

மூலக்கதை