87 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
87 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி!

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில்  87 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
 
கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஏ பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து, இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
 
அதன்படி இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரோய் (13) போல் டாகி வெளியேறினார். அதன்பின்னர் ஹேல்ஸ்இ ரூட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 
 
இந்நிலையில் ஹேல்ஸ் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மில்னே பந்தில் போல்டானார். தலைவர் மோர்கன் 13 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து ஏமாற்றமளித்தார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட், 64 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 48 ஓட்டங்களையும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 210 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது. 
 
அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பட்லர் மட்டும் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். இதனால், 49.3 ஓவர்களில் இங்கிலாந்து 310 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பட்லர் 61 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். 
 
இதையடுத்து 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணியின் குப்தில் மற்றும் ரொஞ்சி ஆகியோர் களமிறங்கினர். இதில் ரொஞ்சி தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே போல்டாகி ஆட்டமிழக்க மறுமுனையில் நின்ற குப்தில் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
 
அணித் தலைவர் வில்லியம்சன் பொறுப்பாக ஆடி 87 ஓட்டங்களையும், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் 39 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 44.3 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
 

மூலக்கதை